தோட்டக்கலை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

கோவை, டிச.7: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தோட்டக்கலை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தோட்டக்கலைத்துறையில் காலியாக உள்ள 175 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வெற்றிபெற கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 12ம் தேதி முதல் தினசரி இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இப்பயிற்சியில் கலந்து கொள்ள விண்ணப்ப பிரதியுடன் நேரில் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில் கலந்து கொள்பவர்களுக்கு இலவசமாக குறிப்புகளும், மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். எனவே கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும்  எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: