உடன்குடி,டிச.6: பிள்ளைவிளையில் டிரான்ஸ்பார்மர் திடீரென மாயமானதால் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள பிள்ளைவிளையில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், ஏராளமான விவசாய நிலங்களும் உள்ளன. இந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்கென பிள்ளைவிளை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பக்கத்து ஊரான அருளானந்தபுரம் வாலிவிளை பகுதியில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. ஆனால் அடிக்கடி உயர் அழுத்த மின்சார விநியோகத்தால் பாதிக்கப்பட்ட இந்தபகுதி மக்களின் கோரிக்கையை அடுத்து பிள்ளைவிளைக்கு என தனியாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இதனையடுத்து சீரான மின்சார விநியோகப்பட்டதையடுத்து பொதுமக்கள், விவசாயிகள் பயனடைந்து வந்தனர்.