திருச்செந்தூர், டிச.6: வீரபாண்டியன்பட்டினம், ராஜ்கண்ணா நகரைச் சேர்ந்த பிச்சைக்கண்ணு மகன் ஆசாத்பிரேசன் (34). மருத்துவபிரதிநிதியாக உள்ளார். கடந்த நவ.18ம் தேதி திருச்செந்தூர் பஸ்நிலையம் எதிரே உள்ள ஓட்டல் முன்பு பைக்கை நிறுத்தி விட்டு அருகில் உள்ள மெடிக்கல் ஸ்டோருக்கு வசூலுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இதுகுறித்து திருச்செந்தூர் போலீசில் ஆசாத்பிரேசன் புகார் செய்தார்.