பைக் திருடிய வாலிபர் மேலும் ஒரு வழக்கில் கைது

திருச்செந்தூர், டிச.6: வீரபாண்டியன்பட்டினம், ராஜ்கண்ணா நகரைச் சேர்ந்த பிச்சைக்கண்ணு மகன் ஆசாத்பிரேசன் (34). மருத்துவபிரதிநிதியாக உள்ளார். கடந்த நவ.18ம் தேதி திருச்செந்தூர் பஸ்நிலையம் எதிரே உள்ள ஓட்டல் முன்பு பைக்கை நிறுத்தி விட்டு அருகில் உள்ள மெடிக்கல் ஸ்டோருக்கு வசூலுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இதுகுறித்து திருச்செந்தூர் போலீசில் ஆசாத்பிரேசன் புகார் செய்தார்.

 இந்நிலையில் உடன்குடி பூலத்தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் சுப்பிரமணியன் (26) என்பவரது பைக் மாயமானது தொடர்பாக காயல்பட்டினம், உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சேர்மத்துரை (34) என்பவவரை போலீசார் கைது செய்து விசாரித்த போது, திருச்செந்தூர் பஸ்நிலையம் எதிரே ஒரு பைக்கையும் திருடியதை சேர்மத்துரை ஒப்புக் கொண்டார். இதையடுத்து 2 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: