பொதுவிநியோக திட்ட குறைதீர்ப்பு முகாம்கள் நாளை நடக்கிறது

நாகர்கோவில், டிச.7: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:பொது விநியோகத்திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், சிறப்பு மக்கள் குறைதீர் முகாம்கள் டிசம்பர் 8ம் தேதி (நாளை) மயிலாடி, நெய்யூர் பேரூராட்சி அலுவலகங்களிலும், ஈசாந்திமங்கலம், பாலூர் ஊராட்சி அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெறும் இந்த சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

போதிய ஆவணங்கள் இல்லாமல் ஸ்மார்ட் குடும்ப அட்டை பெற முடியாமல் நியாய விலைக்கடையில் ஒட்டப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்பத்தலைவரின் புகைப்படம், கைபேசிஎண், ஆதார் எண் பதிவு செய்தல் போன்ற திருத்தங்கள் செய்து விரைவில் ஸ்மார்ட் குடும்ப அட்டை பெறுவதற்கு மனு அளித்து தீர்வு காணலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: