நித்திரவிளை, டிச.7: கொல்லங்கோடு அருகே ஊரம்பில் அரசு டாஸ்மாக் கடை, தனியார் மனமகிழ் மன்றம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதனால் இங்கு தமிழக, கேரள குடிமகன்கள் அதிகம் பேர் வருவர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனியார் மனமகிழ் மன்றத்தில் இருந்து வெளியே வந்த ஒருவர், தீடீரென ஊரம்பு களியக்காவிளை சாலையின் நடுவில் படுத்துக் கொண்டார். இதனால் அந்த சாலையில் போக்கு வரத்து தடைபட்டது. அந்த பகுதியில் உள்ளவர்கள் அவரை தூக்கி சாலையோரம் படுக்க வைத்தனர். பொதுமக்கள் அவரிடம் சோதனையிட்ட போது, ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் கலந்த மது இருந்தது. அதை அவர்கள் எடுத்தபோது போதை தெளிந்த அந்த வாலிபர் அவர்களிடம் இருந்து மதுவை பறித்தார்.