தாம்பரம்: தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று கிழக்கு தாம்பரம், எம்.இ.எஸ். சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.கார்லி மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் தாம்பரம், சி.எஸ்.ஐ. கார்லி மேல்நிலை பள்ளி மாணவர்கள் 373 பேர் மற்றும் மாணவிகள் 187 பேர் என மொத்தம் 560 பேர் உட்பட மொத்தம் 715 மாணவர்கள் மற்றும் 959 மாணவியர் ஆகியோருக்கு 1683 இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.