ரயில்வே உதவி எண் 182 மூலம் 18,360 வழக்குகள் பதிவு : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ரயில்வே உதவி எண் 182 மூலம் 18,360 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: ரயில் பயணகளின் பாதுகாப்பு நலன்கருதி ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ரயிலில் நடக்கும் திருட்டு, கொலை, கஞ்சா கடத்துதல் போன்ற குற்றச் சம்பவங்கள் குறித்து தெரிவிக்கவும், ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு ஏற்படும் அசாம்பாவிதங்களை உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கும் வகையில் கடந்த 2014ம் ஆண்டு ரயில்வே உதவி எண் 182 அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்மூலம் ரயிலில் நடைபெறும் அசாம்பாவித சம்பவங்கள் குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தெரிவித்து வந்தனர். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 18,360 பயணிகள் ரயிலில் நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவித்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவித்துள்ளது.

Related Stories: