திருவள்ளூர், டிச. 7: அம்பேத்கர் 62வது நினைவு நாளையொட்டி திருவள்ளூரில் நேற்று அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.கலெக்டர் அலுவலகத்தில் அம்பேத்கர் படத்துக்கு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், வேணுகோபால் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் து.சந்திரன், சப்-கலெக்டர் ரத்னா, ஜெயதென்னரசு, கிருபாகரன், சுகுணா ஆகியோர் மாலை அணிவித்தனர். புரட்சி பாரதம் கட்சி சார்பில், ஆண்டர்சன்பேட்டையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கட்சித் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி மாலை அணிவித்தார். மாநில துணைத்தலைவர் ஐ.ஏழுமலை, என்.பி.முத்துராமன், ஏ.கே.சிவராமன், ஏ.கே.தமிழ், ஏ.அலெக்ஸ், பாலாஜி ஆகியோரும் மாலை அணிவித்தனர். பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் ஜெ.சங்கர் தலைமையில், மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினர். நிர்வாகிகள் பூவை ஜெரால்டு, கே.திராவிடபக்தன், ஆதிசேஷன், சி.சு.ரவிச்சந்திரன், எஸ்.மகாலிங்கம், ஆர்.ஜெயசீலன், டி.ராமகிருஷ்ணன், கே.அரிகிருஷ்ணன், பொன் பாண்டியன், எஸ்.செல்வகுமார், பா.நரேஷ்குமார், ஜி.நாராயணபிரசாத் மாலை அணிவித்தனர்.