108 ஆம்புலன்சில் ஆண்குழந்தை

காஞ்சிபுரம், டிச.7: காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தாலுகா சிறுமயிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (32). கூலித்தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி மஞ்சுளா (28). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது.  உடனடியாக குடும்பத்தினர்  108 ஆம்புலன்ஸ் மூலம் மஞ்சுளாவை மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மஞ்சுளாவுக்கு 2.750 கிலோ  எடையில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அங்கிருந்து மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் செல்வக்குமார் மற்றும் பைலட் வினோத்துக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.  

Related Stories: