சென்னை, டிச. 7: தமிழகத்தில் போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் காஞ்சி வள்ளுவன் பயிற்சி மையத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு, குறுகிய காலத்திலேயே 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது, குரூப் 2 மற்றும் குரூப்-4 தேர்வு மூலம், மொத்தம் 17,000 பேரை வரும் 2019ம் ஆண்டுக்குள் பணியமர்த்த இருப்பதாக தமிழ்நாடு தேர்வாணையம் அறிவித்துள்ளது. மாணவர்களை இத்தேர்வுக்காக தயார்படுத்தும் விதமாக 6 மாத கால பயிற்சி அளித்து, அவர்களை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல நாளை (8ம் தேதி) முதல் காலை 9 மணி முதல் காஞ்சிளள வள்ளுவன் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தின் அனுபவம் வாய்ந்த ஆசிரியர் மூலம் பயிற்சி வகுப்புகள் துவங்க இருக்கின்றன. கடந்த மாதம் நடந்து முடிந்த குரூப் -2 முதல்நிலை தேர்வில் 140க்கு சரியாக விடையளித்த மாணவர்கள் அடுத்தகட்ட தேர்வான முதன்மை தேர்வுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அதற்கான பயிற்சி வகுப்புகள் நாளை துவங்க உள்ளது.