சென்னை, டிச. 7: சென்னையில் இருந்து சூளூர்பேட்டை, நெல்லூர் செல்லும் மின்சார ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ் பாபுவுக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் கனகவள்ளி தலைமையில் அதிகாரிகள், கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, ஏளாவூர், ஆரம்பாக்கம் பகுதிகளில் மின்சார ரயில்களில் சோதனை நடத்தினர். அப்போது, சென்னையில் இருந்து சூளூர்பேட்டை செல்லும் மின்சார ரயிலில் கேட்பாரற்று கிடந்த 20க்கும் மேற்பட்ட மூட்டைகளில் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, தச்சூர் கூட்டு சாலையில் அமைந்துள்ள கிடங்கில் ஒப்படைத்தனர்.