குடும்ப தகராறில் உறவினரை கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை திருப்பத்தூர் கோர்ட் தீர்ப்பு

திருப்பத்தூர். டிச.7: குடும்பத் தகராறில் உறவினரை கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்னகம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர். ராஜேஸ்வரி(42). இவரது கணவர் இளங்கோ(45). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி, தங்கை கணவர் முனுசாமி(40) என்பவருக்கும் குடும்ப பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முனுசாமி, இளங்கோவின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் தீவிர சிகிச்சை பெற்று உயிர் தப்பினார்.இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து முனுசாமியை கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று திருப்பத்தூர் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி வேலரசு விசாரித்து முனுசாமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ₹5,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, போலீசார் முனுசாமியை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

========================

Related Stories: