ஆம்பூர், டிச. 7: ஆம்பூர் அருகே நேற்று கொடிய விஷமுள்ள கொண்டை விரிச்சான் பாம்புகளை வனத்துறையினர் நான்கு மணி நேர தேடுதலுக்கு பின்னர் பிடித்தனர்.ஆம்பூர் அருகே உள்ள மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளியை சேர்ந்தவர் பழனி(48),விவசாயி. வனப்பகுதியையொட்டி உள்ள இவரது நிலத்தில் வாழை, நெல், கால்நடை தீவனப்பயிர்கள் பயிரிட்டு வளர்த்து வருகிறார். நேற்று காலை பழனியின் மனைவி பார்வதி வயலுக்கு நீர் பாய்ச்ச மின் மோட்டார் அறைக்கு சென்றார். அப்போது அங்கு இரண்டு பாம்புகள் ஊர்ந்து செல்வதை பார்த்து கூச்சலிட்டார்.