புதுச்சேரி மதுபானங்கள் பதுக்கி விற்றவர் பிடிபட்டார்

செய்யூர், டிச. 7: சூனாம்பேடு பகுதியில் புதுச்சேரி மதுபானங்களை பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சூனாம்பேடு பகுதியை சேர்ந்த ஒருவர் புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட மதுபானங்களை பதுக்கி விற்று வந்ததாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சூனாம்பேடு காவல் துறை ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில், போலீசார் சூனாம்பேடு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது புதுச்சேரி மதுபானங்களை பதுக்கி விற்று வந்த அதே பகுதியை சேர்ந்த தர்மன் மகன் இனியவன் (35) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவரை மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories: