காஞ்சிபுரம், டிச.7: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுராந்தோட்டத் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன் மனைவி மல்லிகா (52). இவர் பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரின் மகளும் இவருடன் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் பொய்யாகுளத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் தினேஷ் (18 ) என்பவர் அவரது நண்பர் மூலம் பழக்கடைக்கு வந்து போனதில் மல்லிகாவுக்கு அறிமுகம் ஆகி உள்ளார். எனவே, தினேஷிடம் மல்லிகா, கடை வியாபாரம் சரியில்லை, உடம்பு அடிக்கடி சரியில்லாமல் போகிறது என்று தெரிவித்துள்ளார். அதற்கு தினேஷ் குறிபார்த்துச் சொல்வதாகவும் அதற்கு கொஞ்சம் செலவாகும் என்று தெரிவித்துள்ளார்.