ஆட்டோ மோதி பஸ் டிரைவர் பலி

வத்திராயிருப்பு, டிச.6: வத்திராயிருப்பு அருகே டூவீலரில் சென்ற அரசு பஸ் டிரைவர் ஆட்டோ மோதி உயிரிழந்தார். வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் திருக்குமரன்(43). திருவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்துக் கழக கிளையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் திருவில்லிபுத்தூரில் இருந்து டூவீலரில் ஊருக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோ திருக்குமரன் டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது சம்மந்தமாக திருக்குமரன் மனைவி விஜயலட்சுமி வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் எஸ்ஐ ராஜசேகர் ஆட்டோ டிரைவர் வனமுத்து மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: