அருப்புக்கோட்டை, டிச.6: அருப்புக்கோட்டை ரோட்டரி கிளப், புளியம்பட்டி சாலியர் உறவின்முறை சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை சேகரித்தனர். இவை நாகப்பட்டினம் மாவட்டத்தை சுற்றியுள்ள 10 கிராமங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. வாகனத்தை அருப்புக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேசன் கொடியசைத்து அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் சாலியர் உறவின்முறை தலைவர் சண்முக கணபதி, ரோட்டரி கிளப் தலைவர் முத்துவேல், முன்னாள் தலைவர் கனகராஜ், வனத்துக்குள் அருப்புக்கோட்டை யோகா சுந்தர்ராஜன் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல் அருப்புக்கோட்டை ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் இளைஞர் நற்பணி மன்றத்தினர் ரூ.5 லட்ச மதிப்பிலான நிவாரண பொருட்களை கொண்டு சென்று வழங்கினர்.