ஜெயலலிதா நினைவுதினம் சாத்தூரில் அமமுக அமைதி பேரணி

சாத்தூர், டிச.6:  ஜெயலலிதா இரண்டாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி அமமுக சார்பில் சாத்தூரில் அமைதி பேரணி நடைபெற்றது.

்அமமுக மாநில இளைஞர் பாசறை துணைச்செயலாளர் விக்னேஷ் தலைமை வகித்தார். சாத்தூர் நகர செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். சாத்தூர் காமராஜர் சிலையில் இருந்து முக்குராந்தல் வரை அமைதி போரணியாக வந்து  முக்கராந்தலில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சாத்தூர் ஒன்றிய செயலாளர் தாமோதரன், சாத்தூர் மாணவரணி செயலாளர் முனீஸ், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர், சேமு, ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் சோலைராஜ் மற்றும் கட்சி நகர, ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள்  கலந்து கொண்டனர்.

Related Stories: