கவிஞர் முடியரசன் நினைவுதின கூட்டம்

காரைக்குடி, டிச.6:  காரைக்குடியில் கவியரசர் முடியரசன் நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. செயலாளர் தமிழ்முடியரசன் வரவேற்றார். அவைக்கள தலைவர் செந்தமிழ்ப்பாவை தலைமை வகித்தார். துணைத்தலைவர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். புலவர் மெய்யாண்டவர், ஆசிரியர் முருகேசுவரி, முன்னாள் ஊராட்சி தலைவர் அன்பரசு, பேராசிரியர்கள் கயல்விழி, குணசீலி, கண்ணையா, கவிஞர் மனோஇளங்கோ, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆறுமுகம், தமிழார்வலர்கள் சண்முகசுந்தரம், பாலு, ராகவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், முடியரசனாருக்கு நூற்றாண்டு மணிமண்டபம் கட்ட வேண்டும். பல்கலைக்கழகங்களில் முடியரசனார் பெயரில் ஆய்விருக்கை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இணைச்செயலாளர் புலவர் வனிதா நன்றி கூறினார்.

Related Stories: