எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம்

சிவகாசி, டிச.6:  சிவகாசியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர் சரவணகுமார் வரவேற்று பேசினார். முதல்வர் பிரேமலதா தலைமை வகித்தார். திருத்தங்கல் அரசு மருத்துவமனை எய்ட்ஸ் ஆலோசகர் சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு குறித்து பேசினார். பின்னர் மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர். முடிவில் மாணவி ஹேமலதா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் தங்கம் செய்திருந்தார்.

Related Stories: