அருப்புக்கோட்டையில் பரபரப்பு ஜெயலலிதா நினைவுதினம் சிவகாசியில் அதிமுகவினர் ஊர்வலம், அன்னதானம்

சிவகாசி, டிச.6:  ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு சிவகாசியில் அதிமுகவினர் அன்னதானம் வழங்கினர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினம் விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் அனுசரிக்கப்பட்டது. சிவகாசி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் ஒன்றிய அதிமுக சார்பாக ஜெயலலிதாவின் படத்திற்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக சாட்சியாபுரத்தில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. திருத்தங்கல்லில் ஜெயலலிதா படத்திற்கு அதிமுக நகர செயலாளர் பொன்சக்திவேல் மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினார். சிவகாசி நகரில் நகர செயலாளர் அசன்பதூரூதீன் தலைமையில் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் நடைபெற்றது. முன்னதாக ஜெயலலிதா படத்திற்கு அதிமுக நகர செயலாளர் அசன்பதூரூதீன் மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினார்.  

சாத்தூரில் அதிமுக நகர செயலாளர் வாசன் தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முக்கனி முன்னிலையில் அமைதி போரணி நடைபெற்றது. தொண்டர்கள் மொட்டை போட்டு அஞ்சலி செலுத்தினர்.  விருதுநகரில் செயலாளர் முகம்மது நயினார், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சாந்தி மாரியப்பன் முன்னிலையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. அருப்புக்கோட்டையில் நகரச் செயலாளர் கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருப்புக்கோட்டை ஒன்றிய அதிமுக சார்பில் செயலாளர் சங்கரலிங்கம் தலைமையில் மவுஊர்வலம் நடந்தது.

Related Stories: