சிவகாசி, டிச.6: ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு சிவகாசியில் அதிமுகவினர் அன்னதானம் வழங்கினர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினம் விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் அனுசரிக்கப்பட்டது. சிவகாசி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் ஒன்றிய அதிமுக சார்பாக ஜெயலலிதாவின் படத்திற்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக சாட்சியாபுரத்தில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. திருத்தங்கல்லில் ஜெயலலிதா படத்திற்கு அதிமுக நகர செயலாளர் பொன்சக்திவேல் மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினார். சிவகாசி நகரில் நகர செயலாளர் அசன்பதூரூதீன் தலைமையில் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் நடைபெற்றது. முன்னதாக ஜெயலலிதா படத்திற்கு அதிமுக நகர செயலாளர் அசன்பதூரூதீன் மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினார்.