கொடுக்கல்-வாங்கல் தகராறில் கடை சூறை

தேவதானப்பட்டி, டிச. 6: தேவதானப்பட்டியில் கொடுக்கல், வாங்கல் தகராறில் கடையை சூறையாடியவர்களை போலீசார் கைது செய்தனர்.

தேவதானப்பட்டி மெயின் ரோட்டில் டீக்கடை வைத்திருப்பவர் மகேந்திரபூபதி(35). இவருக்கும், ராமுபிள்ளை தெருவைச் சேர்ந்த காசிமாயன்(40), அண்ணாநகர் காலனியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(55), ரைஸ்மில் தெருவைச் சேர்ந்த சந்திரன்(44), கருத்தராஜ்(63) ஆகியோருக்கும் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேந்திரபூபதி கடைக்குள் புகுந்த இவர்கள் கடையை சூறையாடினர். பின்னர் மகேந்திரபூபதியை குடும்பத்துடன் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். இது குறித்து இருதரப்பு புகாரின் பேரில் இவர்கள் அனைவரையும் தேவதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

Related Stories: