மதுரையில் நடந்தமாநில அளவிலான வில்வித்தையில் தேவதானப்பட்டி மாணவி முதலிடம்

தேவதானப்பட்டி, டிச. 6: தேவதானப்பட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவி மதுரையில் மாநில அளவில் நடந்த வில்வித்தை போட்டியில் முதலிடம் பிடித்தார். மதுரையில் மக்கள் பாதை அமைப்பின் சார்பாக திடல் திட்டம் விளையாட்டு போட்டிகள் 2018, தனியார் பள்ளியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சகாயம் ஐஏஎஸ் கலந்து கொண்டார். இதில் தேனி மாவட்டம், வைகை அருகே உள்ள உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி சார்பாக பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவி தேவதானப்பட்டியைச் சேர்ந்த காருண்யாதேவி கலந்து கொண்டார்.

மாநில அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் காருண்யாதேவி வில்வித்தை போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மேலும் சிலம்பம், குதிரையேற்ற வில்வித்தை ஆகிய போட்டிகளிலும் மொத்தம் மூன்று போட்டிகளிலும் தங்கம் வென்று அசத்தினார். இவருக்கு சிறப்பு விருந்தினர் சகாயம் ஐஏஎஸ் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

Related Stories: