எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்

வருசநாடு, டிச. 6: தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, குமணன்தொழு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு எய்ட்ஸ் பரவாமல் தடுப்பது குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.முகாமில், எய்ட்ஸ் நோய் வராமல் தடுப்பது குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விளக்கி கூறப்பட்டது. இதில் லா தொண்டு நிறுவன செயலாளர் வெங்கடேசன், கடமலைக்குண்டு பள்ளி தலைமைஆசிரியர் பாலகிருஷ்ணன், உதவி தலைமையாசிரியர் மணிஈஸ்வரன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் செல்வம், கடமலைக்குண்டு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மகேந்திரன், உடற்கல்வி ஆசிரியர் துரைப்பாண்டியன், ஜி.ஆர்.வி பள்ளி நிர்வாக அலுவலர் மாரப்பன், தலைமையாசிரியர் தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமுக்கான ஏற்பாடுகளை லா தொண்டு நிறுவனத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: