திருப்பரங்குன்றம், டிச. 6: நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூரைச் சேர்ந்த மாணிக்கம் (48), தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, நேற்று அதிகாலை திருப்பரங்குன்றத்திற்கு வேனில் வந்தனர். கோயிலுக்கு செல்வதற்காக வேனை நிறுத்திவிட்டு, அனைவரும் ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது மதுரையில் இருந்து, திருநெல்வேலி சென்ற ரயில் மோதி, மாணிக்கம் சம்பவ இடத்தில் பலியானார். ரயில்வே போலீசார் உடலை மீட்டு, விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.