நாமக்கல், டிச.6: நாமக்கல் தாலுகா அலுவலகத்தில் நேற்று இரவு கிராம நிர்வாக அலுவலர்கள், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் தாலுகா அலுவலகத்தில், நேற்று இரவு 7 மணியளவில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, மாவட்ட மாறுதல் ஒரே அரசாணையின் மூலம் வழங்குதல், விஏஓ பணியிடங்களை மறு சீரமைப்பு செய்ய கோருதல், விஏஓ அலுவலகங்களுக்கு மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்.