தர்மபுரி, டிச.6: தர்மபுரி மாவட்ட ேவலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை ேவலைவாய்ப்பு முகாம் நாளை (7ம் தேதி) நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திற்குரிய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (7ம் தேதி) நடைபெறவுள்ளது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை, அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத் தேர்வு அனுப்பப்படும்.