தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

தர்மபுரி, டிச.6: தர்மபுரி மாவட்ட ேவலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை ேவலைவாய்ப்பு முகாம் நாளை (7ம் தேதி) நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:  தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திற்குரிய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (7ம் தேதி) நடைபெறவுள்ளது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை, அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத் தேர்வு அனுப்பப்படும்.

இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூபர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், தட்டச்சர், அக்கவுண்டன்ட், கேஷியர், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு டிப்ளமோ பட்டப்படிப்பு மற்றும் பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: