சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி

தர்மபுரி, டிச.6:  தர்மபுரி நேதாஜி பை-பாஸ் சாலையில் சாக்கடை கால்வாய், பொக்லைன் மூலம் தூர்வாரும் பணி நடந்தது.

தர்மபுரி நேதாஜி பை-பாஸ் சாலையில் ஏராளமான கடைகளும், வணிக நிறுவனங்களும், மருத்துவமனைகளும் உள்ளன. நேதாஜி பைபாஸ் சாலையின் ஒருபகுதியான அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப் எதிரே, 2 ஆண்டுகளுக்கு பிறகு பொக்லைன் மூலம் நேற்று சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி நடந்தது. இதில் 10டன் கழிவு பொருட்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதன் மூலம் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: