தர்மபுரியில் அவரை விளைச்சல் அமோகம்

தர்மபுரி, டிச.6:  தர்மபுரி மாவட்டத்தில் அவரை விளைச்சல் அமோகமாக உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதியில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் அவரைக்காய், புடலங்காய், பாகற்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். இதில், தர்மபுரி அடுத்த நல்லம்பள்ளி, லளிகம், நார்த்தம்பட்டி பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் அவரைக்காயை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். சமீபத்தில் பெய்த மழையால், அவரைக்காய் நன்கு விளைந்துள்ளது. ஒரு கிலோ அவரைக்காய்க்கு அதிகபட்சமாக ₹30 விலை கிடைத்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: