வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலர் காலி பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி, டிச.6:  திருச்சி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் அலுவலகத்தில் காலியாக உள்ள காவலர் பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  திருச்சி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர் அலுவலகத்தில் இரவு காவலர் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இதற்கு தகுதியாக தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  எஸ்சி, அருந்ததி இனத்தவர், எஸ்டி இனத்தவர் 18 முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட முஸ்ஸிம் இனத்தவர் ஆகியோருக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 முதல் அதிகபட்ச வயது வரம்பு 32 வயது ஆகும். இதர பிரிவினர் குறைந்தபட்ச வயது வரம்பு 18 முதல் அதிகபட்ச வயது வரம்பு 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

மேற்கண்ட தகுதியுடைய விருப்பம் உள்ள பொதுப்பிரிவு முன்னுரிமையற்ற மனுதாரர்கள் தங்களது அனைத்துக் கல்விச் சான்றுகள், சாதிச்சான்று, குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றின் நகலுடன் மண்டல இணை இயக்குநர் வேலைவாய்ப்பு அலுவலகம், நெ.16,சி மாவட்ட நல நிதிக்குழு வளாகம், வில்லியம்ஸ் ரோடு, திருச்சி - 620001 என்ற முகவரிக்கு வருகிற 26ம்தேதிக்குள் பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம் என திருச்சி கலெக்டர் ராஜாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: