தா.பேட்டை, டிச.6: முசிறி, தா.பேட்டை, தொட்டியம் பகுதியில் சிலர் கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பருவநிலை மாற்றமே காரணம் என கண் மருத்துவர் ஆலோசனை தெரிவித்துள்ளார். முசிறி, தா.பேட்டை, தொட்டியம் பகுதிகளில் பொதுமக்கள் சிலர் கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் சிவந்தும், கண் எரிச்சலும், அரிப்பும், கண்ணைசுற்றி வீக்கம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கண் மருத்துவர் முருகேசன் கூறும்போது, தற்போது பரவலாக பொதுமக்களுக்கு ஏற்பட்டிருப்பது ஒரு விதமான கண் நோயாகும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படுவது ஆகும். கண்ணில் எரிச்சலும், அரிப்பும் ஏற்பட்டு சிவந்து போனால் கண்ணை மேலும், மேலும் தேய்க்காமல் சுத்தமான துணியால் துடைப்பதும், தூய்மையான தண்ணீரினால் சுத்தப்படுத்துவதும் நல்லது.