உலக மண்வள தின விழிப்புணர்வு பேரணி

துறையூர், டிச.6: திருச்சி மாவட்டம் துறையூரில் உலக மண்வளதினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணி துறையூர் பாலக்கரையில் இருந்து புறப்பட்டு திருச்சிரோடு வழியாக முசிறி பிரிவுரோடு ரவுண்டானாவை அடைந்தது. பேரணியில் மண்வளத்தை பாதுகாப்போம், மழைநீரை சேமிப்போம், இயற்கை விவசாயம் செய்வோம், மண்புழுஉரம்பயன்படுத்துவோம், நீர்வளம்காப்போம், பிளாஸ்டிக்கை ஒழிப்போம் போன்ற கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். பேரணியில் தனியார் வேளாண்மை கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: