கோரிக்கைகளை வலியுறுத்தி மணப்பாறை, மருங்காபுரியில் விஏஓக்கள் தர்ணா போராட்டம்

மணப்பாறை, டிச.6:  மணப்பாறை மற்றும் மருங்காபுரி தாலுகாக்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்றிரவு தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் மருங்காபுரி தாலுகா அலுவலகம் முன் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல், கிராம நிர்வாக அலுவலகங்களில் மின் வசதி, கணினி வசதி செய்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருங்காபுரி மற்றும் மணப்பாறை தாலுக்கா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் இரவு நேர தர்ணா போராட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: