முத்துப்பேட்டை, டிச.6: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை, பேட்டை, தில்லைவிளாகம், இடும்பாவனம், கற்பநாதர்குளம், எடையூர், பாண்டி உட்பட கடலோர கிராமங்களில் பயனிலிருந்த தென்னை மரங்கள் லட்சக்கணக்கில் புயலில் முறிந்து விழுந்து விட்டன. சுமார் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிரும் புயல் காற்றில் நிலைகுலைந்து சேதமடைந்துள்ளது.தற்போது 2வது முறையாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் வேளாண்மைதுறை ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மத்திய தொழில்நுட்ப பிரிவு இணை செயலர் தினேஷ்குமார் தலைமையில் வந்த வேளாண்மைதுறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுப்பைய்யன், வேளாண் ஆணையர் மூர்த்தி, தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர்(பொ)பாலசவுந்தரி ஆகியோர் நேற்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முத்துப்பேட்டை வந்தனர்.