குண்டும், குழியுமான வலையபட்டி சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

பொன்னமராவதி,டிச.6: பொன்னமராவதியில் உள்ள குண்டும் குழியுமான வலையபட்டி சாலையினை சீர் செய்யவேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி பேரூராட்சியில் உள்ள பொன்.புதுப்பட்டி நால்ரோட்டில் இருந்து வலையபட்டி செல்லும் சாலை கஜா புயலுக்கு முன்னரே குண்டும் குழியுமாக கிடந்தது. புயலுக்கு பின் சாலை பெரும் பள்ளங்கள் குளம் போல கிடக்கின்றது. இந்த சாலையில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு சிறிய குளம் குட்டைகள் போல  காட்சியளிக்கின்றது.  இந்த சாலை வழியாகச்செல்லும் வாகன ஓட்டிகள்,  மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  இந்த சாலையினை சீர் செய்ய வேண்டும் என  பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: