கந்தர்வகோட்டை, டிச.6: புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் பயணியர் மாளிகை சுற்றிலும் மரங்களோடு தோப்பின் நடுவே இருப்பது போன்று இருந்தது. கஜா புயல் தாக்குதலையடுத்து பயணியர் மாளிகை சுற்றிலும் இருந்த மரங்கள் முற்றிலும் சேதமடைந்து தற்போது அகற்றப்பட்டுள்ளது. தற்போது பயணியர் மாளிகை பாலைவனத்தில் இருப்பது போன்று காட்சியளிக்கிறது. மீண்டும் பழைய நிலைமைக்கு சில வருடங்கள் ஆகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.