பாடாலூரில் ஆலத்தூர் வட்ட ஓய்வு அலுவலர் சங்க கூட்டம்

பாடாலூர், டிச.6: ஆலத்தூர் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் பாடாலூரில் நடைபெற்றது கூட்டத்திற்கு சங்க தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். செயலாளர் முகிலன் கடந்த மாதத்தில் நடைபெற்ற கூட்ட அறிக்கையும், வரவு, செலவு கணக்கும் வாசித்தார். சங்கத்தின் மாவட்ட செயலாளர்  மருதமுத்து, மாநில சங்கத்தின் செயல்பாடுகள், மாநில சங்க தேர்தல் பற்றி எடுத்துக்கூறினார். கூட்டத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்ட பல குழுக்களாகப் பிரிந்து செயல்படுவது, ஆலத்தூர் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கிளையில் காலியாக உள்ள ஆடிட்டர் பதவிக்கு உறுப்பினர் வெங்கடாசலம் போட்டியின்றி  தேர்வு செய்யப்படுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் துணைத் தலைவர் செல்லப்பன், பொருளாளர் செங்கமலை, உறுப்பினர்கள் கனகசாமி, குணசீலன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: