அரியலூர், டிச.6: 2018-19ம் ஆண்டில் அரியலூர் மாவட்டத்தில் ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் கீழ்க்கண்ட வேளாண்மைபயிர்களுக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நெல்-3 , நவரை, கோடை நெல், பிரிமியத்தொகை (ஏக்கருக்கு) - ரூ.443, காப்பீடு செய்ய கடைசி நாள் - 15.02.2019, பயிர்கள் - மக்காச்சோளம், பிரிமியத்தொகை (ஏக்கருக்கு) - ரூ.304, உளுந்து, பிரிமியத்தொகை (ஏக்கருக்கு) - ரூ.214, நிலக்கடலை, பிரிமியத்தொகை (ஏக்கருக்கு) - ரூ.374, சோளம், பிரிமியத்தொகை (ஏக்கருக்கு) - ரூ.147, எள், பிரிமியத்தொகை (ஏக்கருக்கு) ரூ.180, ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் - 15.1.2019, பயிர் - பருத்தி, பிரிமியத்தொகை (ஏக்கருக்கு) - ரூ.1240, காப்பீடு செய்ய கடைசி நாள் - 28.2.2019, பயிர் - கரும்பு, பிரிமியத்தொகை (ஏக்கருக்கு) - ரூ.1696, காப்பீடு செய்ய கடைசி நாள் - 31.10.2019. இத்திட்டத்தின்கீழ், கடன் பெறும் விவசாயிகள் வங்கிகளில் , தொடக்கவேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கட்டாயமாக பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறாத விவசாயிகள், அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மூலமாகவோ தங்களது விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.