பட்டதாரி பெண் கடத்தல்: வாலிபர் மீது புகார்

கள்ளக்குறிச்சி, டிச. 6: தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகள் தமிழ்செல்வி(20), பிஎஸ்சி பட்டதாரி.

சம்பவத்தன்று இவர் விரியூர் பகுதியில் உள்ள கல்லூரிக்கு சென்று படித்த சான்றுகளை வாங்கி வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றவர், மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இது குறித்து கோவிந்தசாமி, தியாகதுருகம் போலீசில் புகார் செய்தார். அதில் திம்மலை கிராமத்தை சேர்ந்த மாயவன் மகன் சுகுனேஸ்(19) என்பவர் தமிழ்செல்வியை ஆசை வார்தை கூறி கடத்தி சென்றதாக கூறியுள்ளார். இது குறித்து  சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: