விழுப்புரம், டிச. 6: விழுப்புரம் பாணாம்பட்டு அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் சுவாமிநாத அய்யர் மகன் வைத்தியநாதன் (38). இவருக்கு திருமணமாகி விட்டது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வைத்தியநாதன் சொந்தமாக கார் வாங்கி ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் ஓட்டி வந்தார். மேலும் பல இடங்களில் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. கடன்சுமை அதிகரித்ததால் காரை விற்று கடன்காரர்களுக்கு கொடுத்து வந்தார். அதன் பின்னரும் கடன்சுமை தீரவில்லை. மேலும் வேலைவாய்ப்பும் இல்லாததால் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் மனைவி, குழந்தைகளுடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த வைத்தியநாதன் நள்ளிரவில் மற்றொரு அறைக்கு சென்று மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.