ரூ.10 ஆயிரம் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை, டிச. 6:  உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது என பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று பேரூராட்சி அலுவலக முதுநிலை உதவியாளர் தங்கவேல் தலைமையில் மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் பேருந்து நிலையம், கடைவீதி, காய்கறி வாரசந்தையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிலையம் மற்றும் காய்கறி வாரசந்தையில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடைகளில் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது.

Related Stories: