அரவிந்தர் நினைவு தினம்

புதுச்சேரி,  டிச. 6:  புதுவையில் புகழ்பெற்ற அரவிந்தர் ஆசிரமம் உள்ளது. அன்னை மற்றும்  அரவிந்தர் பிறந்தநாள், நினைவு தினங்களில் பொதுமக்கள் தரிசனத்துக்காக ஆசிரமம்  திறக்கப்படுவது வழக்கம். அதன்படி அரவிந்தர் 69வது நினைவு தினம் நேற்று  அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஆசிரமத்தில் உள்ள அரவிந்தர் வாழ்ந்த அறை பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டிருந்தது. இதை பொதுமக்கள் மட்டுமின்றி  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து  தரிசித்து சென்றனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டிருந்தது.

Related Stories: