கட்டணம் செலுத்தாவிடில் மின் இணைப்பு துண்டிப்பு

புதுச்சேரி, டிச. 6:  புதுச்சேரி மின்துறை கிராம கோட்ட (வடக்கு) செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மின்துறை கிராம (வடக்கு) கோட்டத்திற்கு கீழ் இயங்கும் வில்லியனூர், பூமியான்பேட்டை, லாஸ்பேட்டை, கோரிமேடு, அசோக் நகர், முத்திரையர்பாளையம், காலாப்பட்டு, ராமநாதபுரம், சேதராப்பட்டு, திருக்கனூர், காட்டேரிக்குப்பம் ஆகிய இயக்குதலும் மற்றும் பராமரித்தலும் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களுடைய மின் கட்டண பாக்கியை பட்டியலில் உள்ள இறுதி தேதிக்குள் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: