புதுச்சேரி, டிச. 6: புதுவை மாநிலத்தில் தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு பிரதேச தலைவர் ஆனந்த் தலைமை
தாங்கினார்.
துணைத் தவைர்கள் பாலாஜி, பிரவீன்குமார், துணை செயலாளர்கள் பார்த்தசாரதி, ஜெகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்மாநில செயற்குழு நந்தன், செயலாளர் சரவணன், பொருளாளர் பாஸ்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.அரசு காலிபணியிடம் நிரப்புதல், ஐடி பூங்கா அமைத்தல், வேலையில்லா கால நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.