ஐடிஐ மாணவர் தூக்குபோட்டு சாவு

பாகூர், டிச. 6:  தவளகுப்பத்தில் தாயை அடித்த மனவேதனையில் ஐடிஐ மாணவர் தூக்குபோட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தவளக்குப்பம்  டி.என். பாளையம் புதுநகரை சேர்ந்தவர் பச்சையம்மாள் (50). இவரது கணவர்  கனகராஜ் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் அவர் கூலி  வேலைக்கு சென்று வருகிறார். இவரது மகன் அருண்குமார் (17) மேட்டுப்பாளையம்  அரசு ஐடிஐ-ல் முதலாமாண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் தனது  தாயாரிடம் செலவுக்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பச்சையம்மாள்  மறுத்துவிட்ட நிலையில், ஆத்திரமடைந்த அருண்குமார் தனது தாயை திட்டினாராம்.  அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்படவே அருண்குமார் தனது தாயை அடித்ததாக  தெரிகிறது. இதில் பச்சையம்மாள் கோபித்துக் கொண்டு மகனிடம் பேசாமல்  இருந்ததோடு, தனது சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.  இதனால் தாயை அடித்து விட்டோமே என்று வேதனையடைந்த அருண்குமார், தாயின்  புடவையால்  தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து  தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: