மயிலாடுதுறை,டிச.6:20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகர்கள் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை முதல் இன்று காலைவரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் 2200 கிராம நிர்வாக அலுவலர்கள் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் அந்தப்பணியினை கூடுதலாக பார்க்கும்போது வழங்கவேண்டிய தொகையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது கூடுதல் வேலைக்கு உரிய தொகையை வழங்க வேண்டும், ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் வழங்குவதுபோன்ற நடைமுறையை செயல்படுத்தவேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கட்டிடமோ அல்லது உறிய வசதி இன்றி படுமோசமாக உள்ளது 40% பெண் விஏஓக்கள் பணியாற்றிவருகின்றனர் ஆனால் அவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க பல்வேறு சங்கடங்களை அனுபவிக்கவேண்டிய நிலை உள்ளது.