வி.கே.புரம், டிச. 6: வி.கே.புரத்தில் கட்டிலில் இருந்து தவறி விழுந்து ஓட்டல் தொழிலாளி பலியானார்.வி.கே.புரம் சிவந்தியப்பர் கோயில் முன்புள்ள தெருவை சேர்ந்தவர் பேச்சியப்பன் (43), குடிப்பழக்கம் உடையவர். வி.கே.புரத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சாந்தலெட்சுமி என்ற மனைவியும், சித்தார்த் (5) என்ற மகனும் உள்ளனர். கடந்த ஓராண்டாக மனைவியை பிரிந்து தந்தை நல்லபெருமாளுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நல்லபெருமாள், நெல்லையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார். அன்றிரவு குடிபோதையில் கட்டிலில் படுத்திருந்த பேச்சியப்பன், தூக்கத்தில் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது மூக்கில் அடிபட்டு உயிரிழந்தார்.