வள்ளியூர், டிச. 6: இந்து கடவுள்களை கேவலப்படுத்தி பேசிய நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வள்ளியூர் போலீசில் பிஇ பட்டதாரி புகார் அளித்துள்ளார்.வள்ளியூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் மகரஜோதிபாபு. பிஇ பட்டதாரியான இவர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இவர், வள்ளியூர் போலீசில் நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பிறகு, சிலர் சபரிமலை ஐயப்பன் கோயிலை சமூக வலைதளங்களில் தவறாக விமர்சித்து வருகின்றனர். கடந்த 1ம் தேதி எனது சமூக வலைதள பக்கத்திற்கும் நாம்தமிழர் கட்சியின் வலைதள பக்கத்தில் இருந்து சீமானின் உரை வந்தது.