டிச.7ம் தேதி வரை மீன்பிடிக்க தடை

நாகர்கோவில், டிச.6:  மணிக்கு 55 கி.மீ வரை பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் 7ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:  கன்னியாகுமரி கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் மேற்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் வரும் 7ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 55 கி.மீ வேகத்திலும் பலத்த கடற்காற்று வீசக்கூடும்.  எனவே மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: