மாமல்லபுரத்தில் செயல்படாத தானியங்கி சிக்னலால் வாகன ஓட்டிகள் தத்தளிப்பு

திருப்போரூர், நவ. 6: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுலாதலமான மாமல்லபுரத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் கார், பைக் மற்றும் வாடகை வாகனங்களில் வருவதால் மாமல்லபுரம்  பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இவற்றை தவிர்க்க முக்கிய பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது.  போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையும் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து சில ஆண்டுக்கு முன்பு மாமல்லபுரத்தில் 3 இடங்களில் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது. இந்த தானியங்கி சிக்னலை இயக்க போக்குவரத்து போலீசார் இல்லாததால் தொடர்ந்து இயக்கப்படவில்லை. இதுபோல்  மாமல்லபுரத்தில் சிக்னல் அமைக்கப்பட்டும் இயங்காமல் உள்ளது. எனவே, தானியங்கி சிக்னலை நிரந்தரமாக இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: