திருப்போரூர், நவ. 6: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுலாதலமான மாமல்லபுரத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் கார், பைக் மற்றும் வாடகை வாகனங்களில் வருவதால் மாமல்லபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இவற்றை தவிர்க்க முக்கிய பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையும் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.